வியாழன், 18 ஏப்ரல், 2013

பஞ்சாபில் கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்த 4 ஆண்கள்!!

பஞ்சாபில் பட்டப்பகலில் பலபேர் கண் முன்பு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை இரும்பு கம்பிகளால் தாக்கிய கொடூரம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பட்டப்பகலில் 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலர் பார்க்க இரும்புக் கம்பியால் அடித்துள்ளனர். இதை வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக சத்தமின்றி நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்பெண்ணை தாக்கிய 4 பேரில் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த 4 பேரில் ஒருவரான மனோஜ் என்பவருக்கு தான் கடனாக கொடுத்த ரூ.20,000 ரொக்கத்தை அப்பெண் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மேலும் 3 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாபில் புகார் கொடுக்க வந்த பெண் மற்றும் அவரது தந்தையை போலீசார் அடித்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்க  ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: