செவ்வாய், 16 ஏப்ரல், 2013

அஞ்சலி ஒரு சிறையிலிருந்து மீண்டதும் மற்றொரு ???

நடிகை அஞ்சலிக்கு தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் வெங்கடேஷ்
‘ஆதரவு’ உள்ளது என்ற விஷயம், ரகசியம் அல்ல. இருப்பினும் அஞ்சலி விவகாரத்தில் வெங்கடேஷ் வெளிப்படையாக என்ட்ரி கொடுக்கவில்லை. காரணம், வெங்கடேஷின் அப்பா பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடு என்கிறார்கள்.
அஞ்சலிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் அப்பாவுக்கு தெரிந்தால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று பயந்தாராம் வெங்கடேஷ்.
ஆனால், அதற்காக சும்மாவும் இருந்துவிடவில்லை வெங்கடேஷ். ஙைதராபாத்தில் இருந்தபடியே, சென்னையில் இருந்த அஞ்சலியின் சித்தி பாரதி தேவிக்கு தனது சினிமா உலக நண்பர்கள் மூலம் பிரஷர் கொடுத்தாராம்.
வழமையான தெலுங்குப் பட வில்லன் ஸ்டைலில் மீசையை முறுக்கி கண்களை உருட்டி, ‘மைல்ட் மிரட்டல்’ ஒன்றை விடுத்துவிட்டு சென்றாராம், சென்னையில் வசிக்கும் பிரபல விநியோகஸ்தர் ‘காரு’ ஒருவர். ‘காரு’ பற்றி யாருக்கு தெரியுமோ இல்லையோ, சித்தி பாரதி தேவிக்கு நன்றாகவே தெரியும்.
உடனே அவர் அடித்தார் ஒரு யு-டர்ன். “இனிமேல் எனக்கும் அஞ்சலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவளது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்ற சரண்டர் அறிக்கை வந்தது.
அதென்ன திடீரென இப்படி மாறுகிறது என ஆச்சரியப்பட்ட டைரக்டர் களஞ்சியம் விசாரித்தபோதுதான், ‘காரு’ மேட்டர் அவருக்கு தெரிய வந்தது. “தமிழகத்தில் வந்து, தெலுங்குக்காரர் மிரட்டுவதா” என்று அவர் எகிறியதால்தான், ‘தமிழ் உணர்வு இயக்கம்’ காட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.
அஞ்சலிக்கு ஆதரவாக தெலுங்கு சினிமா உலகம் வருவது போல் தனக்கு ஆதரவாக தமிழ் சினிமா உலகம் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார் களஞ்சியம். இதற்காக சில நகர்வுகளையும் செய்தார். ஆனால், ‘தமிழ் உணர்வாளர்கள்’ என அறியப்பட்ட சினிமா புள்ளிகள் இருவர் இடம்-வலமாக தலையாட்டி விட்டனராம்!
“இதற்குள், இயக்கத்தை கொண்டுவந்து அசிங்கப்படுத்த வேண்டாம்” என்று இந்த இருவரும் இலவச அட்வைஸ் வேறு கொடுத்ததில், கடுப்பில் உள்ளார் களஞ்சியம்!
ஆமா.. அவர்களுக்கு தெரியாத சமாச்சாரமா இதெல்லாம்?

கருத்துகள் இல்லை: