சனி, 20 ஏப்ரல், 2013

மோடி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட மாட்டார் ! நிதின் கத்காரி உறுதி

கூட்டணி கட்சிகளை இழக்கவோ, கட்சியில் உள்ளவர்களை தியாகம் செய்யவோ பா ஜ க  விரும்பவில்லை: அருண்ஜெட்லி
கூட்டணி கட்சிகளை இழக்கவோ, கட்சியில் உள்ளவர்களை தியாகம் செய்யவோ, பா.ஜ., விரும்பவில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறினார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அருண் ஜெட்லி, பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படமாட்டார் என, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உறுதியளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி நாங்கள் எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை. அது தான் சிக்கலுக்கு காரணமானது. நாங்கள் கட்டுப்பாடான கட்சியை நடத்துகிறோம். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக, கட்சி முடிவு எடுத்தால் மட்டுமே, அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.
தே.ஜ., கூட்டணியில், மேலும் கட்சிகள் சேருவதால், பலன் அடைவதை விரும்புகிறோம்; அதற்காக எவ்வித தியாகமும் செய்வோம் என அர்த்தமல்ல. இப்போதைக்கு அதுபற்றி, கருத்து எழவில்லை. எங்கள் வேட்பாளர் குறித்து, நாங்கள் முடிவு செய்யும் போது, அது பற்றி தெரிவிப்போம்.மோடி பெயர் முன்னிறுத்தப்படுவதால், எவ்வித

கருத்துகள் இல்லை: