செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஈரானில் நிலநடுக்கம் 7.8 ரிக்டர் சென்னையிலும் உணரப்பட்டது

ஈரான் பாகிஸ்தான் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஈரானை தாக்கிய நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் கருவில் 7.8ஆக பதிவாகி உள்ளது. ஈரான் நிலநடுக்கத்தின் அதிர்வு மத்திய கிழக்கு நாடுகளிலும் உணரப்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு வடக்கு, மேற்கு இந்தியாவில் உணரப்பட்டது.
 டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 16.04.2013 செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர், ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர்.
பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
முன்னதாக காலையில் அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு குழந்தை இறந்தது. 2 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: