புதன், 17 ஏப்ரல், 2013

அஜித்! மவனே பிறந்தநாள் போஸ்டர் அடிச்சே ? அப்புறம் பாரு ?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாரை விரும்பும் ரசிகர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் ரசிகர்களாக இல்லை. அஜித்தின் இளகிய குணத்திற்கும் ரசிகர்களாக இருக்கின்றனர். தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலக ஹீரோக்களுக்கும் மிகப்பெரும் வலிமையாக இருப்பது ரசிகர் மன்றம். அத்தகைய ரசிகர் மன்றத்தையே கலைத்த அஜித், தனது பிறந்தநாள் வருவதால் பேனர் அடிக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கும் ரசிகர்களுக்கு பேனர் அடித்து பணத்தை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கும், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் கொடுத்து உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார ஒரு பேட்டியில் பேசிய அஜித் “பேனர்கள் அடித்து பணத்தை வீணாக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். மேலும் உணவு, படிப்பு இல்லாமல் பல குழந்தைகள் வாடுகிறார்கள். தயவுசெய்து அவர்களுக்கு பணத்தை செலவு செய்து உதவுமாறு என் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 
அஜித்தின் கோரிக்கைகளை அவரது ரசிகர்கள் நிறைவேற்றுகிறார்களா! என்பது மே 1-ஆம் தேதி தெரியும்

கருத்துகள் இல்லை: