சனி, 20 ஏப்ரல், 2013

ராகுல்: இனி திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை ! கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்

சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் நாட்டிய நாடகம் 
சென்னை::தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேருவதில்லை
என்ற தனது அதிரடி தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இப்போது உள்ள அரசு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அநேகமாக இந்த ஆண்டே தேர்தல் நடைபெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை மாயாவதியும் அறிவித்துள்ளனர்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் குறைந்தது 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு தேர்தல் வியூகங்களை ராகுல் காந்தி வகுத்துள்ளார். மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடனும், கேரளாவில் முஸ்லீம் லீக்குடனும், மணி பிரிவு கேரள காங்கிரசுடனும் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார். பீகாரில் பஸ்வானுடனும், லாலுவுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.மேற்குவங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதேபோல தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. திராவிடக்கட்சிகள் அல்லாத மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விரும்புவதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: