ஞாயிறு, 1 ஜூலை, 2012

குஷ்பு சவால்! எங்க பலத்தை 4ம் தேதி வந்து பாருங்கள்.


சென்னை: ஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்கள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்தமாட்டோம். 
எத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டாலும் திமுகவை அழிக்க முடியாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்கமுடியாது. திமுகவின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள் என்று சவால் விட்டுள்ளார் நடிகை குஷ்பு.

சென்னை திருவல்லிக்கேணியில் அதிமுக ஆட்சியைக் கண்டித்தும், சிறை நிரப்பும் போராட்டத்தை விளக்கியும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குஷ்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது குஷ்பு பேசுகையில்,
ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் பால், பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கேள்வி கேட்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள், குண்டர் சட்டங்கள் பாய்கிறது.

இந்திய வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களை, திமுகவினரை பழிவாங்கும் அரசாகவே செயல்படுவது அதிமுக மட்டும்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
திமுகவினரை பழி வாங்குவதிலேயே நேரத்தை போக்கும் அதிமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்றவை தினமும் நடந்து வருகிறது. இதை காவல்துறை கண்டு கொள்வதில்லை. திமுகவினர் மீதே காவல் துறைக்கு கவனம் இருக்கிறது.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்கள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்தமாட்டோம்.
எத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டாலும் திமுகவை அழிக்க முடியாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்கமுடியாது. திமுகவின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள் என்றார் குஷ்பு.

கருத்துகள் இல்லை: