வியாழன், 31 மார்ச், 2011

ம.தி.மு.க., குளத்தில் கல்லெறிந்தவர்கள்

நான் 1996ல் ரஜினியை அவரது வீட்டில் போய் சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினேன். அப்போது நான் ஏன், தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்டேன் என்றும் சொன்னேன். "நீங்கள் கட்சி துவக்குவதாக இருந்தால் துவக்குங்கள். நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். உங்கள் பெயரை சொல்லி, உங்கள் மன்றத்தின் பெயரை சொல்லிக்கொண்டு பலனை யாரோ சுரண்டிக்கொண்டு போவதற்கு அனுமதிக்காதீர்கள்' என்றும் சொன்னேன்.

"நான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க மாட்டேன். ஒரு வாரத்தில் அமெரிக்கா போகிறேன்' என, ரஜினி சொன்னார். தேர்தலில் கம்யூனிஸ்ட்டுடனும், ஜனதா தளத்துடனும் கூட்டணி அமைத்து போட்டியில் குதித்தோம். தி.மு.க.,- அ.தி.மு.க.,வுக்கு இணையாக ம.தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது.

திடீரென மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவக்கி தி.மு.க.,வுடன் கூட்டு வைத்ததாலும், அருமை நண்பர் ரஜினிகாந்த், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி விமான நிலையத்தில், "அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது' என ஜெ., ஆட்சி குறித்து பேட்டி கொடுத்ததும், ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.

தேர்தலில் தி.மு.க., - த.மா.க., கூட்டணி வெற்றி பெற்றது. மூப்பனார் புதிய கட்சி துவங்காமல் இருந்திருந்தால், ரஜினி பேட்டி கொடுக்காமல் இருந்திருந்தால், அந்த தேர்தலில் ம.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றிருக்கும்.

அது குறித்து நான் வெளியிட்ட அறிக்கையில், "மிகப்பெரிய வெள்ளத்தில், சில சந்தன மரங்களும் அடித்து செல்லப்படலாம். ம.தி.மு.க., என்ற இந்த சந்தன மரம், வளர்ந்தாலும், வெட்டப்பட்டாலும் மக்களுக்கு பயன் தந்துகொண்டே தான் இருக்கும்.

-ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ "டிவி' பேட்டியில்

கருத்துகள் இல்லை: