வெள்ளி, 1 ஏப்ரல், 2011

வாகன விபத்தில் படுகாயமடைந்த மின்னல் ஸ்ரீரங்காவின் மெய்பாதுகாவலர் உயிரிழந்தார்!

செட்டிகுளம் பகுதியில் மின்னல் ஸ்ரீரங்கா பயணம் செய்த வாகனம் நேற்று முன்தினம் கடந்த புதன்கிழமை விபத்திற்கு உள்ளாகியது. இதன்போது ஸ்ரீரங்காவும் அவரது வாகனசாரதியும் சிறு காயங்களிற்கு உள்ளாகிய நிலையில், படுகாயமடைந்த மெய்பாதுகாவலர் செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீரங்காவின் மெய்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் அதிவேகமாக சென்ற நிலையில், வேக கட்டுப்பாட்டை இழந்ததினால் நேற்று முன்தினம் மாலை 5;:00 மணியளவில் செட்டிகுளம் அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் விபத்திற்கு உள்ளாகியது.

கருத்துகள் இல்லை: