சனி, 11 செப்டம்பர், 2010

கே.பி.யின் பிரதிநிதிகளை தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு!

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத கொள்வனவாளரு குமரன் பத்மநாதனின்(கே.பி) பிரதிநிதிகளை தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் இணைத்து கொள்வதற்கு அவ் ஒன்றியத்தில் உள்ள சில தமிழ்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கே.பி.யின் லண்டனை தளமாக கொண்ட சில பிரதிநிதிகள் இந்த ஒன்றியத்தின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் இதை தான் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பொது செயலருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நான் அதை எதிர்கின்றேன், கே.பி. தற்போது அரசாங்கத்தின் நலன்களுக்கேற்ப செயற்படுகிறார். ஆவரின் பிரதிநிதிகளை எமது கூட்டங்களில் இணைத்து கொள்ள முடியாது. பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா அம்மான்) இக் கூட்டங்களுக்கு அழைப்பதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதையும் நான் எதிர்க்கின்றேன். அவர் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவராக உள்ளார் எனவும் சிவாஜிலிங்கம் கூறினார். தமிழ் கட்சிகளின் ஒன்றியத்தின் அடுத்த கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: