திங்கள், 6 ஜூன், 2011

மக்களுக்கு சேவை செய்ய கட்சித் தாவுகிறேன் - மு.றெமிடியஸ் அறிவிப்பு


யாழ். மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.றெமிடியஸ் தன் சுயவிருப்பின் பேரில் ஆளும் ஜக்கிய மக்கள் சுகந்திர முன்னனியில் இணைந்து யாழ்.மாநகர சபையின் ஆளும் தரப்பின் ஆசனத்தில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபையில் தழிழ் மக்களுக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கு தான்னாலான சேவையைச் செய்வதற்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் ஆளும் ஜக்கிய சுகந்திர மக்கள் முன்னனியுடன் இணைந்து செயற்படுவதற்கு தான் சுய சிந்தனையுடன் எடுக்கும் தீர்மானம் இது என்றும், எனது இத்தீர்மானத்தை யாழ்.மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்மிக்கை தனக்கு இருப்பதாகவும், தனது முடிவை உத்தியோகபூர்வமாக தழிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார்.

கருத்துகள் இல்லை: