திங்கள், 3 மே, 2021

மார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ஒரு விவாதம்

 நூர் கா.மு  : தமிழக மார்வாடிகள் ஆதிக்கம் பற்றி கொஞ்சம் கவனிக்க வேண்டிய தேவை உள்ளது.   .
நேற்று அசந்த நேரம் சேகர் பாபு அண்ணணிற்கே விபூதி அடிக்க பார்த்தார்கள்.இவர்களின் பெருக்கம் மற்றும் இவர்கள் அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல.
எல்லா ஊரிலும் கணிசமான அளவில் இவர்கள் எண்ணிக்கை அதிகமாக ஆகிறது.அதிலும் இவர்களின் சில பண்டிகைகளுக்கு இறைச்சி கடையை சாத்த சொல்லும் நிலைக்கு இவர்கள் தலையீடு இருக்கிறது.இதை எல்லாம் இனி அனுமதிக்கவே கூடாது.1,2 குடும்பங்கள் என்று இருந்தவர்கள் இன்று ஊருக்கு 1000 குடும்பங்கள் என்று வளர்ந்து விட்டார்கள்.
இவர்கள் இங்கு இருக்க கூடாது என்று சொல்லவில்லை அவ்வாறு சொல்வது தவறு.ஏனெனில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இந்திய ஒன்றிய குடிமகன் ஒன்றியத்தில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என அனுமதி அளித்து இருக்கிறது.
ஆனால் இவர்களின் மதவாத அரசியல் சரி செய்யப்பட வேண்டும், இவர்கள் அரசியல்ரீதியாக இந்த மண் சார்ந்த அரசியலில் ஈடுபட செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களின் வியாபாரத்தையும் நெறிமுறைப்படுத்த வேண்டும்.நிச்சயமாக நம் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் சில தொழில் வாய்ப்புகள் இவர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது உண்மை.
சண்முக நாதன்  : இவர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ளது
இங்கு இவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும்
நூர் கா.மு   : ஆம் அண்ணா.. இவர்களின் அரசியல் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
Md Ibrahim B  :நூறு சதவீத உண்மை



கருத்துகள் இல்லை: