ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ரஜினிக்கும் தமிழகத்துக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா?

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்*
*கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர்*
*அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை*
*அவர்களிடம் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்றும் தெரியவில்லை*
*நடிகர் விவேக்கின் திறமையையும், ஆற்றலையும், பேச்சையும் அறிவையும் பார்த்து அவர் பிராமணன் என கருதினேன் என்கிறார்*
*தன் உறவினர் அனிருத்தை முன்னிறுத்துவதற்காக இளையராஜா இடத்தில் அனிருத்தை பார்க்கிறேன் என்கிறார்*
*மலையை மடுவோடு ஒப்பிடுகிறார்*
*திரைப்படத்தில் மக்களை போராட தூண்டுகிறார், தரையில் மக்கள் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிறார்*
*போராடும் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்கிறார்*
*நிராயுதபாணியாக இருந்த ஜே.என்.யூ.மாணவர்களை கொடூரமாக தாக்கியவர்களை கண்டிக்காமல், போராடும் மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்*
*45 - ஆண்டுகளாக பணம் சம்பாதிப்பதை குறிகோளாக கொண்ட இவர் பண மதிப்பிழப்பை வரவேற்கிறார்*
*என்ன பேச வேண்டும்,எப்படி பேச வேண்டும் என்பதறியாமல் உளறுகிறார்*
*பொதுமக்களுக்கு துளியும் தொடர்பில்லாத தமிழருவி மணியன்,ஏ.சி.சண்முகம்,கராத்தே தியாகராஜன் போன்றோரை அரசியல் ஆலோசராக வைத்துள்ளார்*
*தமிழனின் ஒரு துளி வேர்வைக்கு ஒரு தங்ககாசு தருவேன் என்கிறார்,தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி எனது பூர்வீகம் என்கிறார்*
*தமிழகத்தை தாண்டியவுடன் நான் மராட்டியன் நான் வாழ்ந்தது கர்நாடகத்தில் என்கிறார் தமிழகத்தை லாவகமாக தவிர்த்து விடுகிறார்*

*காவேரி தண்ணிரை திறந்து விடக்கோரி கர்நாடகத்துக்கு எதிராக போராடினால் மௌன சாமியராகி விடுகிறார்*
*நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு தராதே என பாரதிராஜா தலைமையில் திரையுலகம் போராடினால்..அதை திசை திருப்ப..*
*மறுநாள் இவர் மட்டும் தனியாளாக உண்ணாவுரதம் இருக்கிறார்*
*நலிந்த அல்லது சிறு தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார்*
*உழைப்பாளி படத்தை விஜயா- வாகினி கோடீஸ்வர கம்பெனிக்கு கால்ஷீட் கொடுத்தார்*
*இத்தருணத்தில் பிரபல இயக்குனர் பீம்சிங்கின் மகனும் சிறந்த பிலிம் எடிட்டருமான பீ.லெனின் சிறு,குறு,நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்காத ரஜினியை கண்டித்து இனிமேல் அவர் படத்துக்கு பணிபுரிய மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்தார்*
*தன்னுடைய திரைப்புகழை..தன் ரசிகர்களின் உழைப்பை விசுவாசத்தை தன் சுயலாபத்துக்காக மட்டுமே பயன் படுத்திக் கொள்கிறார்*
*நூற்றுக்கணக்கான பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் திரையுலகத்திற்காக குரல் கொடுக்காதவர்..ஒரு துரும்பைக்கூட நகர்த்தாதவர் தான் ரஜினி*
*இப்படி முரண்பாடுகாளின் மொத்த உருவமாக திகழும் இந்த முட்டாத காளையைத்தான் முரட்டுக்காளை என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்*
*இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என தங்களது பிழைப்புக்காக கூறிக்கொண்டு அலைகிறது ஒரு கூட்டம்..நிலைகுலையப் போகிறது ரஜினியின் ஆட்டம்*
*ரஜினிகாந்த் திரையுலகம் எனும் நிழல் உலகத்தில் தனது 100 வயதுவரை கூட நடிக்கலாம்,நாமும் ரசிக்கலாம்,ஆட்சேபனையில்லை*
*நாடு எனும் தரையுலைகில் தலையெடுக்க அவர் இனி ஒரு ஜென்மம் எடுத்து வர வேண்டும்*
*தலை உள்ளவர்கள் தலைவர்கள் ஆகிவிட முடியாது*
*📰காகிதம் ராஜன்*

கருத்துகள் இல்லை: