திங்கள், 25 நவம்பர், 2019

அதிமுக கோவை மேயர் வேட்பு... வட இந்திய சோனாலி பிரதீப் .. பாஜக மகளிரணி ... . வேலுமணியின் சாப்ட் கார்னர் ?

சமுகவலையில் வந்தவை .... பொள்ளாச்சி 200 க்கும் அதிகமான பெண்களை கடத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காப்பாற்றிய
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் கோவை மேயர் வேட்பாளராக களமிறக்கும் சோனாலி பிரதீப் முன்னாள் பாஜக மகளிரணி யை சேர்ந்தவர் என்பது நம்மில் கித்னா பேருக்கு மாலும் ஹேய் ...
தமிழக அமைச்சர்களின் ‘அந்தப்புர அந்தரங்கங்கள்’ அம்பலமாகும் நேரம் இது போல!’ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஜெயகுமார் தொடங்கி, ‘ஆழ்துளை கிணறு ஸ்பெஷலிஸ்ட்’ விஜயபாஸ்கர் வரை பல மாண்புமிகுக்களின் திரைமறைவு சங்கதிகள் தொடர்ந்து வெளியாகி, மக்களை முகம் சுளிக்க வைத்துக் கண்டிருக்கிறது.இந்த ‘உவ்வே’ வரிசையில் இப்போது
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் இணைந்திருக்கிறார். கோவையில் செட்டிலாகியிருக்கும் அந்த வட இந்திய பெண்ணின் பெயர் சோனாலி பிரதீப்.
செக்கச் சிவந்த மேனி, செழுமையான உடலமைப்பு, கேட்பவரைக் கவர்ந்திழுக்கும் பேச்சு என சோனாலியிடம் ஏகப்பட்டத் தூண்டில்கள் உண்டு.
“அது யாரானாலும் சரி…ஒரு முறை என்னைப் பார்த்துவிட்டால் அப்புறம் சரண்டர்தான்’’ என தன்னைப் பற்றி இவர் பெருமையாக சொல்வதுண்டாம். ஆளை கிறங்கடிக்கும் தோற்றம் கொண்ட இவர் பல அழகிப் போட்டிகளிலும் மகுடம் சூடியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் வேலுமணியை எதேச்சையாக சந்தித்திருக்கிறார் சோனாலி. முதல் சந்திப்பிலேயே அமைச்சரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளீரிட்டிருக்கிறது.

“ஏதாவது தேவைண்ணா காண்டாக்ட் பண்ணுங்க’’ என வேலுமணி சொல்ல, இதற்காகவே காத்திருந்த சோனாலி அந்த நிமிடம் முதல் இன்று வரை தொடர்ந்து அமைச்சருடன் தொடர்பில் இருந்து வருகிறாராம்.

நாளுக்கு நாள் அதிகமான இந்த நெருக்கம், சோனாலியை முதல்வர் எடப்பாடியிடம் அறிமுகம் செய்துவைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

இதனால் ஏற்பட்ட தெம்பில், “டமிள்நாடு கவர்மென்டில் என்ன மேட்டர் ஆனாலும் செஞ்சி தர்றேன். நான் சொன்னா யாரும் தட்டமாட்டாங்க’’ எனப் பலரிடமும் சோனாலி சொல்லி வருவதாகப் பேச்சு.

வேலுமணியுடனான தொடர்பின் அடுத்தக் கட்டமாக அண்மையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் சோனாலி. சூட்டோடு சூடாக கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனுவும் தாக்கல் செய்ய, “இங்க என்னப்பா நடக்குது!’’ என விபரம் புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள்.

“ஆரம்பத்தில் பொது இடங்களில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் அமைச்சரை சந்திச்சி அந்த பொண்ணு போட்டோ எடுத்தபோது நாங்க பெருசா கண்டுக்கலீங்க. ஆனால் அதற்கப்புறம் கோவைக்கு அமைச்சர் வரும்போதெல்லாம் இந்த பொண்ணும் கரெக்டா வந்திடுதுங்க. ‘மேயர் சீட் எனக்குதான்… அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாருண்ணு’ சொல்லுது. இது எங்கே போய் முடியப் போகுதோ…தெரியலீங்க’’ எனப் புலம்புகிறார்கள் லோக்கல் அதிமுக புள்ளிகள்.

கருத்துகள் இல்லை: