திங்கள், 25 நவம்பர், 2019

குருமூர்த்தி : நானே அதிமுகவை ஒருங்கிணைத்தேன்.. நானே பன்னீரை தியானம் இருக்க சொன்னேன் .. வீடியோ

   நக்கீரன் : ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம் என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் கூறியதையடுத்தே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார். அவர் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த தியானத்திற்கு பின் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தேன். ரஜினிகாந்த் வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவது மிகவும் அவசியம் என்ற அவர், தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் மிகப்பெரிய சக்தி திமுகதான் எனவும் குற்றம்சாட்டி பேசினார்.

கருத்துகள் இல்லை: