சனி, 3 ஆகஸ்ட், 2019

உத்தர பிரதேசம்.. சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்து தோற்ற கணவன் -சித்திரவதை செய்த நண்பர்கள்

Jaunpur (UP): In a horrifying incident, a man addicted to gambling and alcohol, bet his wife after running out of money and allowed his friends to gangrape her after losing the stake. The incident took place in Jaunpur district and after the incident, the victim went to court when the police refused to take action on her complaint. Following a court order, an FIR has been registered in Jaffarabad police station in Jaunpur district.
வெப்துனியா : உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயம் வைத்து சூதாடி கணவர் தோற்றதால், அவரது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். லக்னோ:> உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவரது வீட்டில் குடிபோதையில் தன் இரு நண்பர்களுடன் சூதாடியுள்ளார். அப்போது தனது மனைவியை பணயம் வைத்து விளையாடியுள்ளார். பின்னர் அவர் தோற்கவே, உடன் இருந்த நண்பர்கள் அவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அப்பெண்ணின் கணவர் தடுக்க முன்வரவில்லை. இதனால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார் அந்த பெண். பின்னர் சில மாதங்கள் கழித்து, திருந்தி விட்டதாகவும், மீண்டும் வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி அப்பெண் காரில் கணவருடன் வந்துள்ளார். வழியிலேயே மீண்டும் அவரது நண்பர்களை போனில் அழைத்துள்ளார். அவர்களும் காரில் ஏறி, மீண்டும் அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், காவல்துறையிடம் புகார் கொடுக்கவே அதனை எடுக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் அப்பெண், நீதிமன்றத்திற்கு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாபராபாத்  காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன் பின்னரே காவல் துறையினர் 3 பேர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு  செய்துள்ளனர். மூவரும் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: