Ravishankar Ayyakkannu :
இந்தியாவில் இனி கல்வி முதற்கொண்டு எல்லாம் தனியார்மயம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள்.யார் இந்தத் தனியார்?
நம்ம ஊர் நாடாரும் பொட்டிக் கடைச் செட்டியாருமா ரயில் விடப் போகிறார்?
Reliance போன்ற பெருநிறுவனங்கள் அல்லவா NEET தேர்வு பயிற்சி நடத்துவது முதற்கொண்டு செங்கோட்டையை வாடகைக்கு எடுப்பது வரையான அனைத்திலும் ஈடுபடுகிறார்கள்?
யார் இந்தப் பெரு நிறுவனங்கள்?
92% உயர் சாதியினர்.
பார்ப்பனர் + பனியா கூட்டணி.
கார்ப்பரேட் நிறுவன உயர் பதவிகளில் உயர் சாதியினர் 92% இருக்கும் போது ஏழை உயர் சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீடு தாருங்கள் என்று கேட்பது அட்டூழியம் இல்லையா? இந்த நிறுவனங்களே தங்கள் சாதி ஆட்களை வளர்த்து விட முடியாதா?
இந்தியாவின் தனியார்மயத்தில் உள்ள சாதிப் பரிணாமத்தைப் புரிந்து எதிர்க்கும் ஒரே அரசியல் திராவிட அரசியல்.
(தொடர்புடைய ஆய்வுக் கட்டுரை மறுமொழியில் - http://www.dalits.nl/pdf/120811.pdf?fbclid=IwAR1hJM5amgmAuuaqWw7gbVf1z8RebT4KzrkC8ezvIFWOa-pwfNHOh85cev8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக