திங்கள், 17 ஜூன், 2019

உயர்மின் கோபுர பாதிப்பு நிருபணம் .. ஈரோடு கணேசமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

mahalaxmi : உயர்மின் கோபுரத்தால் ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கணேசமூர்த்தி அவர்கள்.
உயர்மின் கோபுரத்திற்கு அடியில் அருகில் வசிக்கும் போது, வேளாண்மை செய்யும் போது, மின்காந்த அலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் முதற்கொண்டு பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் புற்றுநோயும் முதற்கொண்டு பல்வேறு நோய்கள் நீண்டகால பாதிப்புகள் எனவும், குறுகிய கால பாதிப்புகள் உள்ளதாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தி இருக்கும் வேலையில்
ஈரோடு மாவட்டத்தில் எப்பொழுதுமே விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஐயா கணேசமூர்த்தி அவர்கள் நேற்று இரவு 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் இண்டூர் வரை செல்லும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் 400 கிலோ வாட் உயர்மின் கோபுர அடியில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே நின்று டியூப் லைட்டை பிடித்துப் பார்த்தார் நன்றாக ஒளிர்ந்தது, அதேசமயம் டெஸ்டரை அவருடன் உடம்பில் வைத்து பார்த்த போது அவர் உடம்பில் மின்காந்த அலைகளால் அதிகப்படியாக ஓடிக்கொண்டிருந்த மின்சாரத்தின் விளைவாக டெஸ்டர் நன்றாக எரிந்தது,

அவரும் இரண்டாவது முறையாக நேற்று நேரில் ஆய்வு செய்து இதை உறுதிப்படுத்திக்கொண்டார் , நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக ஒரு உறுதிமொழிப் பத்திரத்தையும் தயாரித்து கையெழுத்திட்டுக் கொடுத்தார்,
அதோடு மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதை காண்பிப்பதற்காக அந்த புகைப்படங்களை பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்,,
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடமும் மின்சாரத் துறை அமைச்சரிடமும் இதை கவனப்படுத்துவதாகவும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விரைவில் பேசவிருப்பதாகவும் அப்போது தெரிவித்தார்.
பொதுமக்களும், பொதுநல இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இந்த உயர்மின் கோபுரத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இவ்வளவு காலம் தெரிந்திருந்தாலும் இனிமேல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை தர வேண்டுமாய் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
புகைப்படங்கள் கீழே பதிவிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: