ஞாயிறு, 5 மே, 2019

சசிகலா நடராசனின் ஐந்தாம்படையாக கூலிக்கு மாரடித்த தமிழ்தேசிய கும்பல்

Jagadheesan LR : இதைக்கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. திராவிடம் என்பதே வந்தேரிகளை வாழவைத்த நயவஞ்சக அரசியல்; ் ஐந்தாம்படையாக கூலிக்கு மாரடித்த தமிழ்தேசிய கும்பல் (இந்த வார்த்தையின் முழு அர்த்தமும் தெரிந்தே பயன்படுத்துகிறேன்) இன்று வடநாட்டாரை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப்போவதாக கிளம்பியிருக்கிறார்கள்.
பெரியார் தொடங்கி அண்ணா, கலைஞர் வரை எல்லோருமே வந்தேறித் தெலுங்கர்கள் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேரமும் வாய் கூசாமல் நெஞ்சறிந்து பொய் சொன்ன, வெறுப்பை கக்கிய தமிழ்தேசியர்கள், இறுதியாக எஞ்சியிருந்த ஆனப்பெரிய திராவிடத்தலைமையான கலைஞர் 2016 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று ஜெயலலிதாவின் உடனுறை தோழி சசிகலாவின் கணவர் நடராசரானின
தெலுங்கர் என்று பொய்யாக தூற்றப்பட்ட கலைஞரின் ஆட்சியில் நடக்காத விபரீதமெல்லாம் 100% அக்மார்க் தமிழர்களான எடப்பாடி/ஓபிஎஸ் இரட்டையர் ஆட்சியில் நடக்கிறதே எப்படி? அந்த இரண்டுபேரின் ஆட்சியை எதிர்த்து ஏன் ஒரே ஒரு சொல்கூட இந்த விளம்பரங்களில் இல்லை? இந்த அநியாயத்தை அரங்கேற்றும் மோடிக்கான எதிர்ப்பெங்கே? மோடிக்கான செயற்திட்டத்தை வகுத்தளிக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு எதிரான ஆக்ரோஷ முழக்கம் எங்கே? யாரை எதிர்த்து இந்த போராட்டத்தை நடத்துகிறீர்கள்? என்கிற அடிப்படையையே சொல்லாமல் இதென்ன பொத்தாம் பொதுவான “வடவர் எதிர்ப்பு?”

எங்கோ இருக்கும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட தமிழ்நாட்டின் முதல்வரை முழுப்பொறுப்பாக்கத்தெரிந்த “தமிழ் தேசியங்”ளுக்கு இங்கே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஒன்றுக்கு இரண்டு முதல்வர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு நடக்கும் அநீதிக்கு தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களையோ மத்திய ஆட்சியாளர்களையோ பொறுப்பாக்க தயக்கம் ஏன்? தடுமாற்றம் ஏன்?
ஏனென்றால் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை தமிழ்தேசிய அரசியல் என்பதே ஒன்று தற்குறி அரசியல். அல்லது இந்துத்துவ வலதுசாரி தேசியவாத அரசியலின் ஐந்தாம்படை அரசியல். இரண்டும் தவிர்த்த தமிழ்தேசியமோ தமிழ்தேசியர்களோ இல்லையா? இருக்கிறது. இருக்கிறார்கள். அதன் பெயர் திராவிடம். அவர்கள் எல்லோரும் திராவிட இயக்கங்களில் இணைந்து அல்லது திராவிடத்தை ஆதரித்து இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசியலின் உண்மையான தமிழ்தேசியமான திராவிடத்தை இல்லாமல் செய்வதே இந்த so called தமிழ்தேசியர்களின் ஒரே இலக்கு. அதனாலேயே இதுகளும் சீரழிந்து தமிழ்நாட்டையும் இந்த இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுகளுக்கும் ஈடுகொடுத்து இந்துத்துவ வலதுசாரி தேசியவாதத்தையும் எதிர்க்கவேண்டும் என்பதே திராவிடத்தின் நிரந்தர சவால்.

கருத்துகள் இல்லை: