செவ்வாய், 7 மே, 2019

காமராஜர் கொலை முயற்சி வரலாறு! ஆர் எஸ் எஸ் கொலைகாரர்களின் கபடம் .. வீடியோ


Satheesh kumar : எரித்து கொலை செய்யுமளவு அப்போ என்ன தான் பேசினார் காமராசர்..
இதோ காமராசர் பேசியது:
*என்ன இப்போ.. பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்..!
மனுசனுக்குக் குந்த குடிசையில்ல..
கட்ட துணியில்ல..
அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான். ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க..!
அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்..! இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்..! இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது..! இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க..!
எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு.. நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு.. இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்..!'*
- இவ்வாறு பேசிய காமராஜர் மீது கடும் ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல், "பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் பூரி சங்கராச்சாரி" - என்று அறிவித்து, நாடாளுமன்றத்தைத் தாக்க  ஆள் சேர்த்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் பசுமாட்டுப் பாதுகாப்புப் பிரிவாக தொடங்கப்பட்ட சர்வதலியா கோ ரக்ஷா மகா அபியான் சமிதி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நாடு முழுக்க இருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருந்த கூட்டம் நாடாளு மன்றத்தைத் தாக்க விரைந்தது. ஆனால் அவர்களின் முக்கியமான இலக்கு பெருந்தலைவர் காமராசர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து கல்வி நீரோடையை எளிய மக்களுக்கும் பாய்ச்சியவர்;
சமதர்மப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்று சொன்னவர்; அதனால்தான் அவரைத் தான் கொல்லத் திட்டமிட்டார்கள்; பசுவதைத் தடை என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களை நடத்துவதற்கு எதிராக இருந்த நேரு போய்ச்சேர்ந்துவிட்டார். மிச்சம் இருப்பது இவர் தான். இவரும் விரைவில் காணாமல் போய்விடுவார் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழ் வெளிப்படையாகவே படம் வரைந்து மிரட்டியது.
புதுதில்லி நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான நிர்வாணச் சாமியார்களோடு சேர்ந்துகொண்டு ஒட்டு மொத்த இந்துத்துவாவும் நிர்வாண வெறியாட்டம் போட்டது. சாலைகளில் வன்முறையை நிகழ்த்தியபடி விரைந்த கும்பல் காமராசர் வீட்டின் மீது கல்வீசத் தொடங்கியது. அவர் இருக்கும் அறை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நிமிடங்களில் காமராசர் இருந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. மிகுந்த கவனத்தோடு காமராசர் அங்கிருந்து வெளியேறி எம்.பி.க்கள் குடி யிருப்புப் பக்கம் சென்று தப்பினார்.
உலகம் முழுக்க இருந்த பத்திரிகைகள் இந்த நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து, இந்துத்துவாவின் கோர முகத்தை அம்பலப்படுத்தின. இது யாரோ சிலரால் நடத்தப்பட்டது என்றெல்லாம் கூட இவர்களால் கழன்று சென்றுவிட முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.
கலவரம் நடப்பதற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியவர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.சின் விஷவித்துகளான ஜனசங்கம், விஷ்வஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம் மற்றும் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்,சையும் சேர்ந்தவர்கள்.
உலகறிய நடந்த ஒன்றை நடக்கவேயில்லை என்று மறுப்பதிலும், நடக்காத ஒன்றை - நடந்ததற்கு நானே சான்று என்று வாதிடுவதிலும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார வகையறாக்களுக்கு இணையானவர்களைத் தேடுதல் கடினம். அண்மைக் காலங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் இப்படி பொய்யும் புரட்டுமாக எதையாவது சொல்வதையும், அதை மறுத்துப் பேசுவதற்கான வாய்ப்பை கத்திக் கத்தி மறுப்பதுமாக விவாதத்தை முடித்துவிடுவதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.
கோட்சேவைத் தியாகி என்பார்கள். சாவர்க்கருக்கு நாடாளுமன்றத்தில் படம் வைப்பார்கள். ஆனால் காந்தியாரைத் திட்டமிட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். என்பதை எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; அது வேறு அமைப்பு என்பார்கள். இந்து மகா சபா என்று எடுத்துச் சொன்னாலும், அதே அமைப்பைச் சேர்ந்த மண்ணுருண்டை மாளவியாவுக்கு பாரத ரத்னா கொடுப்பார்கள்.
நாடு முழுக்க இவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களையும், பயங்கரவாத செயல்களையும், தனிநபர் படுகொலை முயற்சிகளையும் ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
அம்பேத்கருக்கு விஷம் வைத்துக் கொல்லச் சொன்ன கூட்டம் அம்பேத்கர் எங்களைப் பாராட்டினார் என்று புளுகும். அம்பேத்கரின் படத்தைக் கூசாமல் போட்டுக் கொண்டு அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடி தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைத் தேடும்.
காந்தியாரைக் கொன்றுவிட்டு, அவர்
ஆர்.எஸ். எஸ்.சைப் பற்றி வானளாவப் புகழ்ந்தார் என்று அண்டப்புளுகை அவிழ்த்துவிடும்...
ஆர்ஏஸ்ஏஸ் எல்லாதலைவர்களையும் கொன்றுவிட்டு அவர்கள் புகழையும் மட்டும் சுடிக்கொள்ளும் இதற்க்கு காமராஜர் முதல் அம்பேத்கார்முதல் யாரையும் விடவில்லை...
காவிகளால் வெல்லமுயாத ஒரேஆள் வெண்தாடிகிழவன் பெரியாரும் பெரியாரின் கொள்கையை சட்டமாக்கிய சமுகநிதி காவலன் கலைஞரும் தான்...
இன்றுவரை கலைஞர் பெயரையும் பெரியார் பெயரையும் கேட்டால் இன்றும் துக்கம் தொலைந்து நிக்கும் காவிகள்...

கருத்துகள் இல்லை: