செவ்வாய், 7 மே, 2019

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

தினத்தந்தி :பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரி க்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
போர்ட் மோர்ஸ்பை, பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்காக 33 கிமீ தூரத்திலும், நாட்டின் கிழக்கே, 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் தலைநகரான போர்ட் மோர்ஸ்பையில் இருந்து 250 கிமீ தொலைவில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

கருத்துகள் இல்லை: