வெள்ளி, 10 மே, 2019

ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணிகள் ரயில்... தமிழ் தெரியாத ஹிந்தி ஸ்டேஷன் மாஸ்டரால் விபரீதம்

 Passenger train on the same track in Madurai Passenger train on the same track in Madurai Passenger train on the same track in Madurainakkheeran.in - kalaimohan : மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் சிக்னல் கோளாறு ஏற்படுத்துள்ளது. இருப்பினும் அந்த ரயில்வே ஸ்டேஷனின் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த வழித்தடத்தில் செல்ல அனுமதித்திருக்கிறார் அப்போது சற்றுமுன்புதான் அந்த ரயில் மதுரை நோக்கி சென்றது என கேட் கீப்பர் கூற அதிர்ந்த ஜெயக்குமார் திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு இரண்டு ரயிலையும் நிறுத்த சொல்லியுள்ளார். இதனால் ஒரே தடத்தில் இரு ரயிலும் எதிரெதிரே  நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 இருப்பினும் இந்த சம்பவத்தில் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், மொழி தெரியாமல் தவறிழைத்த கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவாசிங் மீனா ஆகியோரை உயர் அதிகாரிகள் பணியிடம் நீக்கம் செய்தனர்.

கருத்துகள் இல்லை: