செவ்வாய், 7 மே, 2019

தங்கத்தமிழ் செல்வன் : திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்!

தினகரன் : சென்னை: திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அ.ம.மு.க'வைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் நேற்று கைது செய்யப்பட்டார். தேனி சிறையில் உள்ள செல்வத்தைச் சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்திலிருந்து இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


அப்போது பேசிய அவர், 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் அமமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார். அதன் பின்னர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் எனக் கூறிய அவர்,
அதை தொடர்ந்து, வரும் பொதுத் தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மே மாதம் 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: