ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

MBBS இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள்தான் அதிக அளவில் தேர்வு எழுதியதும் தேர்ச்சி பெற்றதும்

Anbu Mani : முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள்
வெளிவந்துள்ளன இந்தியாவிலேயே அதிக அளவில் தேர்வு எழுதியவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களும் தமிழ்நாட்டு மாணவர்கள் இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்கள் எம்பிபிஎஸ் சேரும்போது நுழைவுத்தேர்வு இல்லாமல் மாநில கல்வி பாடத் திட்டத்தை படித்து மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் அவர்கள் தான் இப்பொழுது மற்ற அனைத்து மாநில மாணவர்களையும் விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
இதனால்தான் வடமாநிலங்கள் தமிழகத்தை குறிவைத்து ஆக்கிரமிகின்றன .. தமிழகத்தின் வேலை வாய்ப்புக்களையும்  நிதி ஆதாரங்களையும் திட்டமிட்டு சுரண்டும் வேலையை மத்திய அரசே முன்னின்று நடத்துகிறது .

கருத்துகள் இல்லை: