புதன், 6 பிப்ரவரி, 2019

காந்தி பொம்மையை துப்பாக்கியால் சுட்ட ஷகுன் பாண்டே கைது

காந்தி உருவ படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்று போட்டோ எடுத்த பூஜா ஷகுன் பாண்டே கைதுதினதந்தி :காந்தி உருவ படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்று போட்டோ எடுத்த இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோ, கடந்த ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அலிகரை அடுத்த நவ்ரங்காபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார். காந்தியை சுட்டதால் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் மரணத்தை மேன்மைப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்து மகாசபையின் பெண் தலைவர் உட்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தப்பால் பகுதியில் இருந்த இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா ஷகுண் பாண்டேவையும் அவரது கணவர் அசோக் பாண்டேவையும் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.<

கருத்துகள் இல்லை: