வியாழன், 10 ஜனவரி, 2019

அனிதாவைவிடவா ஏழை மாணவிகள் அக்ரஹாரத்திலும் உள்ளார்கள்? மனசாட்சி இல்லாத மனுவின் வாரிசுகளே!

LR Jagadheesan :அனிதாவைவிடவா ஏழை மாணவிகள் அக்ரஹாரத்திலும் அடுக்குமாடிகளிலும் வாழ்கிறார்கள்?
சொல்லாமல் கொல்லும் வறுமைக்கிடையில் மொத்தமுள்ள 1200 மதிப்பெண்ணில் 1176 மதிப்பெண்களை வாங்கிக்காட்டிய அனிதாவை விடவா இன்னொரு அறிவுக்கொழுந்தை இதுகள் உருவாக்கிவிடப்போகிறார்கள்?
;தன் சொந்த அறிவாலும் உழைப்பாலும் படிப்பாலும் மட்டுமே அதிகபட்ச மதிப்பெண் பெற்றுக்காட்டிய அந்த ஏழைச்சிறுமியின் மருத்துவர் கனவை கொன்று அதன் மூலம் அவரையே காவு வாங்கிய காவிக்கும்பல் ஏழைகளின் எதிர்காலத்துக்காகவே பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்காக 10% இடஒதுக்கீட்டை கொண்டுவருவதாக சொல்வதற்கு எந்த அளவு நெஞ்சுரம் இருக்கவேண்டும்?
ஆண்டுக்கு எட்டுலட்சம் சம்பாதிக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்காக கவலைப்படும் கூவைகளில் யாருக்கேனும் அனிதா அப்பாவின் ஆண்டு வருவாய் என்னவென்று தெரியு"
உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட கூச்சமே இருக்காதா? மனசாட்சி உறுத்தாதா மனுவின் வாரிசுகளே?

கருத்துகள் இல்லை: