வியாழன், 23 ஆகஸ்ட், 2018

நடிகை சன்னி லியோன் கேரளாவுக்கு ஐந்து கோடி ரூபாய் நன்கொடை ...

Arun M : ஓரு நடிகை... சன்னி லியோன்.
அவங்களை கேவலமா பேசாதவனே இல்லைனு சொல்லலாம்... விதிவிலக்காக என்னை மாதிரி சிலர் இருக்கலாம். நான் எந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்ககையையும் இதுவரை குறை சொன்னதே இல்லை. தவறே செய்தாலும் அவர்களின் தனிப்பட்ட விசயம் என்று கடந்து விடுவேன். அவர்களுக்கும் மனம் என்ற ஒன்றிருக்கும்.அதில் காயங்கள் ஏராளமாக இருக்கும் என்பதை உணர்ந்தவன். இன்று கேரளா பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பல சூப்பர்ஸ்டார்கள் நடிகர்கள் லட்சங்களில் உதவி செய்யும் பொழுது... ஏன் நம் தமிழ்நாடு முதல்வரே வெறும் 5 கோடிதான் உதவித்தொகை அறிவித்தார். நேற்று பிறந்த சிறு மாநிலமான தெலுங்கானா முதல்வர் 25 கோடி அறிவித்த பிறகுதான் மீண்டும் 5 கோடி அறிவித்தார். ஆனால் சன்னி லியோன் தனி நபராக 5 கோடி ரூபாயை கேரளாவிற்கு அளித்திருக்கிறார் . அவர் கஷ்டப்பட்டு பலரின் கேவலமான பேச்சுக்களை பார்வைகளை தாங்கிக்கொண்டு நடித்து சம்பாதித்த பணத்தை அள்ளி வழங்கியிருக்கிறார். 

இதுவரை நான் அவரது படங்களை பார்த்ததில்லை , ரசிகனும் இல்லை.ஆனால் இன்று அவர் ரசிகன் என்று சொல்ல மிகவும் விரும்புகிறேன்.
ஒரு பிக் சல்யூட் சன்னி லியோனுக்கு...
செருப்படிகள் அவரை ஏசியவர்களுக்கு...

கருத்துகள் இல்லை: