செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

45 வீதம் வெளிநாட்டவர் மருத்துவம் சென்னைக்கே வருகிறார்கள்.

Chennai attracts about 45 percent of health tourists from abroad arriving in the country and 30 to 40 percent of domestic health tourists.
Sivasankaran Saravanan: இந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வருகிற வெளிநாட்டவர்களில் 45 சதவீதம் பேர் சென்னைக்குத்தான் வருகிறார்கள். இந்தியா நாட்டுக்குள்ளேயே மருத்துவ வசதி தேடி வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களில் 40சதவீதம் பேர் சென்னைக்குத்தான் வருகிறார்கள் . அதாவது இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்காக இடம் பெயர்ந்து செல்பவர்களில் இரண்டில் ஒருத்தர் சென்னைக்குத்தான் வருகிறார்.
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகள் தான் தயார் செய்து அனுப்புகின்றன. ஐம்பதாண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிகள் இதை சாத்தியமாக்கியுள்ளன. அதனால்தான் செல்வி ஜெயலலிதா, தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையோடு இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடமுடியாது, உலகின் வளர்ந்த நாடுகளோடுதான் தமிழ்நாட்டை ஒப்பிடவேண்டும்.
Public exam களில் பெற்றோர்களே பசங்களுக்கு பிட்டு எடுத்துவந்து தருவது, தேர்வுகளில் மோசடி, ஆள்மாறாட்டம் என எல்லா தில்லுமுல்லுகளிலும் ஈடுபடுகிற வட இந்திய திருட்டுத்தனத்தை கண்டும் காணாமல் இருக்கிற எச்சைகள் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வித் தரத்தைப் பற்றி பேசுவது தான் எச்சத்தனம். வட இந்திய திருட்டுத்தனத்துக்கு துணைபோவதற்குத் தான் NEET என்ற இன்னொரு மோசடியை கொண்டுவந்துள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவர்களாவதை பொறுத்துக்கொள்ளமுடியாத பொறுக்கிகள் இதற்கு ஜால்ரா தட்டுகிறார்கள். மொதல்ல Dhoujand ஐ Thousand னு சொல்ல கத்து கொடுத்துட்டு அப்புறம் தமிழ்நாட்டு கல்வித்தரத்துக்கு வாங்கடா வெண்ணைகளா!

கருத்துகள் இல்லை: