புதன், 1 நவம்பர், 2017

‘‘அ.தி.மு.க எங்கள் கன்ட்ரோலில்!’’ - தமிழிசையின் ஓப்பன் ஸ்டேட்மென்ட்

விகடன்:  கரூரில் நடந்த பி.ஜே.பி-யின் மாநில பொதுக்குழுவில் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பேச்சுதான் ஹைலைட். ‘‘கறுப்பும் சிவப்பும் ஆட்சி செய்த தமிழகத்தில் இனி காவியும் ஆட்சி செய்யும். ஆவியைப் பார்த்துப் பயப்படுவதுபோல் இனி காவியைப் பார்த்துப் பயப்படுவார்கள்’’ என்றவர், ‘‘தமிழக ஆட்சி பி.ஜே.பி-யின் கன்ட்ரோலில் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் பதில் ‘ஆமாம்’ என்பதுதான். அ.தி.மு.க-வை முன்பு அந்த அம்மா கன்ட்ரோலில் வைத்திருந்தார். இப்போது அ.தி.மு.க-வை மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும்  மோடி கன்ட்ரோலில் வைத்துள்ளார். அதாவது இப்போது பிரதமர் மோடிதான் இந்தியாவுக்கே அம்மா” என்றார்

கருத்துகள் இல்லை: