வெள்ளி, 28 ஜூலை, 2017

2 லட்சம் புத்தகங்கள் விற்பனை! புத்தகத் திருவிழா!

தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பாக, சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் சென்னை புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை,21) தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை சேய்யப்பட்டுள்ளதாக தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புத்தக திருவிழாவில் 200க்கும் அதிகமான பதிப்பகங்களின் 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழா வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறுகிறது அனுமதி இலவசம் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 10 லட்சம் புத்தகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புத்தகத் திருவிழாவில் இன்று (ஜூலை,28)‘ராமானுஜர் 1000’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: