வெள்ளி, 28 ஜூலை, 2017

இந்துமத பட்டியலில் பௌத்தர்களை விடுவிக்க கோரிக்கை! அக்டோபர் 14 மாநாடு!

கடந்த 12-05-2017 அன்று இலங்கையில் நடைபெற்ற
14வது விசாக தினத்திற்கு (புத்த பூர்ணிமா) இலங்கை _கொழும்புவிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் Mr.நரேந்திர மோடி ஆற்றிய உரை.
"புத்தர் காட்டிய வழி நம் அனைவருக்கும் இப்போது பொருத்தமாக உள்ளது!
அமைதியான வாழ்க்கை வாழ புத்த மதம் சிறந்த வழி என்றும் கூறினார்"
இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
எங்களுடைய கேள்வி:
இதே செய்தியை அவர் இந்தியாவில் சொல்ல முடியுமா??
அமைதியாக வாழ புத்த மதம் சிறந்த வழி என்றால் பிறகு நீங்கள் வளர்க்கும்,மனிதனை மிருகமாக்கும் இந்து முன்னணி அமைப்புகள் எதற்கு?
இந்து மதம் எதற்கு??தூக்கி குப்பையில் போட வேண்டியது தானே?
மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கும் உங்கள் RSS மற்றும் BJP போன்ற அமைப்புகள் எதற்கு?
உன் இரட்டைவேடம் எல்லாம் இந்தியாவில் செல்லுபடியாகாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம்.

இந்தியாவில் பௌத்தம் அனைத்து மக்களுக்கும் சிறந்தது என்பதில் துளியளவு கூட சந்தேகம் இல்லை.
ஆனால் இந்த இரட்டை வேட சூது பேச்சு கொண்ட பிரதமர் போன்று சிலர் போடும் பொய் கூச்சல்களால்தான் இன்று இந்தியாவில் இவர்களது இந்துத்துவா கூலிகள் பௌத்தத்தை எதிர்க்கிறார்கள்.
ஒன்று மட்டும் தெளிவாக எந்த பயமும் இன்றி சொல்லிக்கொள்கிறோம்_எங்கள் கையில் சட்டம் உள்ளது.
காலம் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
இந்து முன்னணி ,RSS மற்றும் பிஜேபி போன்ற போலி இந்துத்துவாக்களே! பாரத பிரதமர் மோடியே சொல்லிவிட்டார்.
உலகில் அமைதியாக வாழ புத்தமதம் சிறந்த வழி என்றும்,புத்தர் காட்டிய வழி நம் அனைவருக்கும் பொருத்தமான வழி என்றும்,
இனி நீங்கள் கட்டி அடைகாக்கும் போலி இந்து மதம் இந்திய மக்களுக்கு தேவைப்படாது?? இந்து மத சாக்கடையை குப்பை பையில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்!
குப்பை தொட்டியில் போட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இனியாவது இந்திய ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் அங்க ஒரு பேச்சு..இங்க ஒரு பேச்சு என பேசி அசிங்கப்படாதீர்கள்..
என்றும் எப்போதும் ஒரே கொள்கையோடு இருங்கள்..
இல்லையென்றால் உபியில் முதல்வர் யோகிக்கு அவரது அழுக்கு புத்தியை தூய்மைபடுத்த 110 kg எடையுள்ள புத்தர் படம் பொறித்த சோப்பு அனுப்பிவைத்த மாதிரி
இந்திய பிரதமருக்கும் ,அவரது அடிமை கட்சி பிஜேபி,இந்து முன்னணி மற்றும் RSS நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படும் என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
"இனி இந்திய மண்ணில் என் தமிழ் மக்களை ஏமாற்றி முட்டாள்களாக்கிய போலி இந்து மதத்திற்கு இடம் இல்லை."
மத்திய மாநில அரசுகளே !
"இந்து மதத்தில் தவறாக இணைக்கபட்ட பூர்வீக பௌத்தர்களான பட்டியல் சாதியினர் அனைவரையும் இந்து மதத்திலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கி,
பஞ்சசீல பஞ்சமர்களை பவுத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்று,
அரசை கோரி
-வரும் அக்டோபர் 14 இந்திய பௌத்த திருநாளில் மாபெரும் மாநாடு "
📌இந்து மதவெளியேற்றம்👬👭
📌இந்திய தலைகீழ் வரலாற்றை நேர் செய்தல்
📌தம்மத்தை நிலைநாட்டுதல்.
இவண்
Er.P.செல்வக்குமார் (எ)
செல்வா சித்தார்த்தன்

கருத்துகள் இல்லை: