ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

எவிடென்ஸ் கதிர் : ஏன்யா..உன்னை இதற்காகத்தான் உட்கார வைத்தோமா? அடிமைகளை மேய்க்கும் கங்காணி தனபால்!

பேசாமல் ஆடு மாதிரி இருக்க? இப்போ பேசுறியா இல்லையா? 
இருங்க எசமான்(ஜெயா) பேசுறாரு.
எசமான் என்று சொல்லிய அந்த குரலுக்கு சொந்தக்காரர் தனபால். ஆதிக்க கும்பலிடம் மாட்டிக்கொண்ட ஒரு அடிமை.அரசியலுக்காக தலித் கார்ட்டினை பயன்படுத்துவது கண்டிக்க தக்கது.இரண்டு நாட்களாக தனபாலை வெளுத்து வாங்கறோம்.தவறு இல்லை.அவர் செய்தது நியாயம் இல்லை.ஆனால் பேசாமல் இருக்கிற மற்ற 44 ஆடுகளை பற்றி நமக்கு கவலை உண்டா? என்றாவது சுகந்திரமாக தங்கள்து மக்களுக்காக இந்த ஆடுகள் பேசி இருக்கின்றனவா? அப்படி பேசத்தான் நீங்கள் விட்டீர்களா? பேசாமல் இருக்க வேண்டும்.ஆனால் எங்களுக்கு ஆபத்து என்றால் பேச வேண்டும். இதுதான் எங்கள் ஆடுகளுக்கு நீங்கள் கொடுக்கும் பயிற்சி.
தலித் அடையாளத்தை ஆதிக்க சாதி அட்டூழியங்களை நியாயப்படுத்த, அதற்காக பயன்படுத்தும் செயல் குக்கிராமம் முதல் சட்டசபைவரை தொடர்கிறது
தமிழகத்தின் முன்னணி மனித உரிமை ஆர்வலரும், தலித் உரிமை ஆர்வலருமான எவிடன்ஸ் கதிர், சபாநாயகர் தனபால் சாதிய ரீதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில்  கூறியுள்ளது, லைவ்டே

கருத்துகள் இல்லை: