திங்கள், 6 பிப்ரவரி, 2017

தீபா தலைமறைவு ? மன்னார்குடி மாபியாவுடன் சமரசம்?

சசிகலாவிற்கு எதிராக பிப்ரவரி 24  அன்று தீபா  தனிகட்சி அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியானது. அதே நேரம் தீபாவை சசிகலா தரப்பு சமாதானம் செய்து விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது. தீபாவிற்கு எம்.பி பதவி மற்றும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை எதிர்த்து தீபா எந்த பேட்டியும் இதுவரை பேட்டியளிக்கவில்லை. அவரது தியாகராய நகர் இல்லத்திலும் அவர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. லைவ்டே

கருத்துகள் இல்லை: