வியாழன், 28 ஜூலை, 2016

பழங்குடி பெண்கள் மீது அத்துமீறி நடந்த வனச்சரக அதிகாரிகள்

கம்பம் கிழக்கு வனச்சரகம் பெரிய சுருளி மலைப்பகுதியில் கடந்த 16–ந் தேதி, தேன் மற்றும் வேர்க்கிழங்குகளை சேகரித்துக்கொண்டு பழங்குடிகளான ஐந்து ஆண்களும், நான்கு பெண்களும் திரும்பி வந்துகொண்டு இருந்தனர். அப்போது சுருளிப்பட்டிக்கு அருகே வனச்சரக காவலர்கள் 5 பேர் அவர்களை மறித்து, அவர்களிடம் இருந்த தேன், கடுக்காய், நன்னாரி வேர் மற்றும் இதர மலைப்பொருட்களைப் பறித்துக்கொண்டனர். சோதனை செய்வதாக கூறி பெண்கள் கட்டியிருந்த சேலையை அவிழ்க்க செய்து, அவர்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர். ஆண்களையும் உள்ளாடையுடன் நிற்க வைத்து கேவலப்படுத்தியுள்ளனர். நியாயம் கேட்ட பழங்குடியின ஆண்களை அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். ( கோப்பு படம் )

தகாத வார்த்தைகளால் பேசி இழிவுபடுத்தியது மட்டுமின்றி, வனச்சரக அலுவலகத்தை தாக்க வந்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, காவல்நிலையத்தில் அடைத்து வைத்து அடித்து உதைத்துள்ளனர். பழங்குடியின மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட வனச்சரக காவலர்களை தமிழக அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: