திங்கள், 25 ஜூலை, 2016

சுவாதி பிலால் மாலிக் திருமணமான தம்பதிகள்! சுவாதியை ஒருவர் பிடிக்க மற்றவர் வெட்டினார் !


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவல்கள் வெளிவருகின்றன. ராம்குமாருக்காக வாதாட வழக்கறிஞர் குழு ஒன்று உள்ளது. இவர்கள் தினமும் புதுப்புது தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.ராம்குமாருக்கு ஆதரவாக உள்ள ஒரு வழக்கறிஞர் அளித்த பேட்டி ஒன்றில் சுவாதியை இரண்டு பேர் சேர்ந்து கொன்றதாக திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். குழந்தைகள், குடும்பம் இருப்பதால் தனக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போலீசில் கூறவில்லை என அந்த நபர் கூறியதாக வழக்கறிஞர் கூறினார். எனவே இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் இருப்பதால் இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: