வெள்ளி, 29 ஜூலை, 2016

மாட்டுக்கறி, தலித், முஸ்லீம், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பார்ப்பனீயம், இந்துமதம், விவசாயக் கடன், அம்பானி, இசட்+ பாதுகாப்பு, மோடி,

செய்தி: குஜராத் மாநிலம், கிர் சோமநாதர் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாக தலித்துகள் தாக்கப்பட்டது தொடர்பான போலீசார் விசாரணையில், அந்தப் பசுக்களை சிங்கம் கொன்றதாகவும், பசுக்களின் உடலை அகற்றுவதற்காகவே தலித்துகள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
நீதி: இது காவி குரங்களுக்கு தெரியவில்லை என்பதல்ல பிரச்சினை! குரங்குகளை ஊரை விட்டு இன்னும் நாம் துரத்தவில்லை என்பதே பிரச்சினை!
 
செய்தி: இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது மனைவி நினா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.
நீதி: நிர்பயாக்கள் பயந்து வாழும் நாட்டில் நினாக்களின் பாதுகாப்பிற்காக மோடி அரசு எவ்வளவு பாடுபடுகிறது பாருங்கள்!



செய்தி:  விவசாயக் கடன் தள்ளுபடி பெறுபவர்கள் பட்டியல் கூட்டுறவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
நீதி: கடனைப் பெறவோ, பெற்ற கடனை தள்ளுபடி பட்டியலில் இடம்பெறவோ கொடுக்க வேண்டிய கமிஷனை கட்சி ஆபீசில் கொடுத்து விடவும்.


செய்தி:  தில்லியில் நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 3,540 குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 2,259 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்துள்ளார்.
நீதி: மோடியின் ஆட்சியில் வெறுமனே புள்ளிவிவரங்களில் இடம்பெறும் ஏழைகளுக்கு பாதுகாப்பு வழங்கினால் ‘வளர்ச்சிக்காக’ பாடுபடும் அதானிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி?


செய்தி: குஜராத் மாநிலம், கிர் சோமநாதர் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாக தலித்துகள் தாக்கப்பட்டது தொடர்பான போலீசார் விசாரணையில், அந்தப் பசுக்களை சிங்கம் கொன்றதாகவும், பசுக்களின் உடலை அகற்றுவதற்காகவே தலித்துகள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
நீதி: இது காவி குரங்களுக்கு தெரியவில்லை என்பதல்ல பிரச்சினை! குரங்குகளை ஊரை விட்டு இன்னும் நாம் துரத்தவில்லை என்பதே பிரச்சினை!


செய்தி: தமிழக வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறும்வரை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நீதி: வழக்கறிஞர்களை டவாலியாக கருதிய நீதிபதிகள் மேல் மக்கள் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!


செய்தி: “அரசியலில் நான் மறுபிறவி எடுத்த மகிழ்ச்சியோடு ஊருக்குத் திரும்புகிறேன்” என்று செவ்வாய்க் கிழமை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த கருப்பசாமிபாண்டியன் நெகிழ்ந்து சொன்ன வாசகம் இது.
நீதி: தி.மு.க-வில் இருந்தால் பகுதி நேர அடிமை; அ.தி.மு.க-வில் ஆயுட்கால கொத்தடிமை! சாதா அடிமை ஸ்பெசல் அடிமையாவதில் மகிழ்ச்சி என்ன இகழ்ச்சி என்ன!
  வினவு.com

கருத்துகள் இல்லை: