வியாழன், 1 அக்டோபர், 2015

இலங்கை போர்க்குற்றம்:ஐ.நா. சபையில் உலக நாடுகளின் பிரநிதிகள் கருத்து

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற பன்னாட்டு பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்து - சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு இலங்கை போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்.
ஆஸ்திரேலியா - போர்க்குற்றம் தொடர்பான ஐநா மனித உரிமை அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம்.
இங்கிலாந்து - இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம்.
ஜப்பான் - இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எப்போதும் துணை நிற்போம்.
பிரான்சு - இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

ரஷ்யா - சர்வதேச நாடுகளின் தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும்.
பாகிஸ்தான் - எந்த மாதிரியான விசாரணை என்பதை முடிவு செய்யும் உரிமை இலங்கைக்கு உண்டு. இலங்கை நடவடிக்கைகளை விமர்சிக்கும் நாடுகள் தீவரவாதத்தை ஆதரிப்பவர்கள்.
கனடா - சர்வதேசத்தின் ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை - அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம்.
கொரியா - இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்போம். அமெரிக்கா - ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த இலங்கையின் புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு வரவேற்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது nakkheeran.in

கருத்துகள் இல்லை: