வியாழன், 7 மே, 2015

ஆப்கானில் அடித்து கொல்லப்பட்ட பெண்ணின் கொலைகாரர்கள் நால்வருக்கு மரணதண்டனை

ஆப்கானிஸ்தானில் கும்பலால் பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
 புனித நூலை எரித்ததாகக் கூறி, ஃபர்குண்டா (27) என்ற பெண்ணை ஒரு கும்பல் கடந்த மார்ச் மாதம் அடித்துக் கொன்று தீயிட்டுக் கொளுத்தியது (படம்).
 தலைநகர் காபூலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக 19 போலீஸார் உள்பட 49 பேர் மீது அந்த நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
 விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு அந்த நீதிமன்றம் புதன்கிழமை மரண தண்டனை விதித்தது. மேலும் 8 பேருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அந்த நீதிமன்றம், 18 பேர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.
 மற்றவர்களுக்கான தண்டனை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். dinamani.com

கருத்துகள் இல்லை: