திங்கள், 4 மே, 2015

300 யாஸீதி மக்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்


இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள், தாங்கள் பிடித்து வைத்திருந்த சுமார் 300 யாஸீதி சிறுபான்மையின மக்களை கொன்றுள்ளதாக இராக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 300 யாஸீதி மக்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர் நாட்டின் வடக்குப் பகுதியில் அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மோசூல் நகருக்கு மேற்குப்புறமாக உள்ள பகுதியில் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக யாஸீதி தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு கோடை காலத்தில் வடக்கு இராக் முழுவதும் ஐஎஸ் இயக்கத்தின் பிடியில் வீழ்ந்தபோது, அவர்கள் ஆயிரக்கணக்கான யாஸீதிக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பெருமளவிலானோரை கொலையும் செய்திருந்தனர். பிடித்துவைக்கப்பட்டிருந்த பல பெண்களை அவர்கள் பாலியல் அடிமைகளாகவும் வைத்திருந்தனர். யாஸீதி மக்களின் மத நம்பிக்கையை நிந்தனை செய்துள்ள ஐஎஸ் அமைப்பினர், யாஸீதிகளை மதத்துரோகிகள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை: