செவ்வாய், 5 மே, 2015

காவியா மாதவன் மீண்டும் திருமணம் செய்ய.....

காசி, என் மன வானில் படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கும் இவருக்கும் நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே கணவரைவிட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். காவ்யாவுக்கும் மலையாள நடிகர் திலீப்புக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது.இந்நிலையில் திலீப்புக்கும் அவரது மனைவி மஞ்சு வாரியருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததுடன் விவாகரத்தும் பெற்றனர். இதற்கு காரணம் காவ்யா மாதவன் என குற்றம் சுமத்தப்பட்டது. அதை ஏற்கனவே காவ்யா மறுத்திருந்தார். தற்போது மீண்டும் அதுகுறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். திலீப், மஞ்சுவாரியர் பிரிவுக்கு எந்த வகையிலும் நான் காரணம் கிடையாது. அப்படி சொல்வது என் மனதில் பெரிய வலியை ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரின் உறவைபற்றியோ, அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிடவோ யாருக்குமே உரிமை கிடையாது.
நான் நெறிமுறைகளை பின்பற்றும் குடும்பத்தை சேர்ந்தவள். குடும்ப வாழ்வில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எனக்கு பொருத்தமான சரியான நபர் கிடைத்தால் மறுமணம் செய்துகொள்வேன்.
இவ்வாறு காவ்யா மாதவன் கூறினார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: