செவ்வாய், 5 மே, 2015

கண்ணகியையும் அதிமுக மந்திரிங்க கும்பிடுராங்கோ! எந்த சாமின்னாலும் பரவாயில்லையாம்

அம்மாவின் விடுதலைக்காக கோவில் கோவிலாக அபிஷேக ஆராத்தி செய்யும் அதிமுக கொள்கை சிங்கங்கள் ஒரு சாமியையும் மிஸ் பண்ணிட கூடாதே என்ற கவலையில் தற்போது கண்ணகியையும் வழிபட தொடங்கி உள்ளார்கள் . கண்ணகி சிலை காட்சிக்கு அபசகுனம் என்று டோசர்கள் வைத்து பிடுங்கி அருங்காட்சியகத்தில் தூசி படிய விட்டது ஒரு திமிர் காலம் .இப்போ என்னத்த தின்னா பித்தம் தெளியும்கிற நிலையில் கழக அடிமைகள் கூட்டம் கண்ணகியையும் விட்டு வைக்கவில்லை. வளர்மதி கோகுல இந்திரா சைதை துரைசாமி  போன்றவர்கள் கண்ணகிக்கு பூஜை செய்யும் கண்கொள்ளா காட்சி. ஐயோ அம்மா வெளியே வந்துற கூடாதேன்னு இவிங்க கும்பிடுராயங்கன்னு நான் சொல்லல!

கருத்துகள் இல்லை: