செவ்வாய், 22 ஏப்ரல், 2014

கலைஞர் : தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா?

தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கலைஞர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? என்பது தெரியவில்லை என்றார்.
மேலும், இந்தியாவில் நல்லாட்சி அமைய வேண்டும் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தான் சிறந்தவரா என்பதை, ஜெயலலிதா கண்ணாடி முன்பு நின்று கேள்வி கேட்டு பதில் அளிக்கட்டும் என்றும் கலைஞர் கருணாநிதி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
குஜராத் முதல்வர் மோடியை விட தானே சிறந்தவர் என்று நேற்றைய பிரசாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்ததற்கு கலைஞர்  இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை: