வெள்ளி, 29 ஜூன், 2012

மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணியாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்ததால் அந்த மாணவி அவமானத்தில் கூனிக்குறுகினார்.
மேற்கு வங்க மாநிலம் கைகாட்டாவில் உள்ளது பெர்கோபால்பூர் ஆதர்ஷா உயர் நிலைப் பள்ளி. அங்கு 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து சீருடை பாவாடை அணிந்து வந்தனர். இதைப் பார்த்த புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர் ஆத்திரம் அடைந்து அந்த 3 பேரையும் திட்டித்தீர்தது வகுப்பில் இருந்து வெளியேற்றினார்.

அதில் ஒரு மாணவி ஆசிரியையிடம் தான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வராததால் லெக்கிங்ஸ் அணிந்து வரக்கூடாது என்பது தனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் வெகுண்ட ஆசிரியை இருபாலர் அமர்ந்திருக்கும் வகுப்பில் அனைவருக்கும் முன்பு அந்த மாணவியின் லெக்கிங்ஸை பிடித்து கிழித்து அவரை அரை நிர்வாணமாக்கினார். மேலும் அப்படியே வீட்டுக்கும் போக வைத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கூறுகையில்,
நான் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் பள்ளிக்கு வராததால் சீருடை விதிமுறைகள் எனக்கு தெரியாது என்று ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கோபப்பட்டு அனைவரின் முன்பும் எனது லெக்கிங்ஸை கிழித்தார். அவமானத்தில் நான் கதறி அழுதுவிட்டேன். அவர் எங்கள் 3 பேரையும் வகுப்பை விட்டு வெளியேற்றினார்.
பள்ளி முடிந்த பிறகு லெக்கிங்ஸை கொடுங்கள் வீட்டு இப்படியே செல்ல முடியாது என்று கெஞ்சினேன். ஆனால் அவர் கொடுக்காததால் அரை நிர்வாணக் கோலத்திலேயே வீட்டுக்கு சென்றேன் என்றார்.
இந்த விவகாரம் குறித்து அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்டுள்ளார். இதெல்லாம் சின்ன விஷயம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்வபன் பாலா தெரிவி்ததுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தது. மற்ற பிள்ளைகள் வீட்டுக்கு சென்று வகுப்பறையில் நடந்ததை தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மறுநாள் காலை பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று அந்த மாணவியின் தந்தை கூறியதால் இது குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: