திங்கள், 25 ஜூன், 2012

.அழகிரி:எங்களுக்கு அழைப்பு வரவில்லை

திமுக அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு
 எங்களுக்கு அழைப்பு வரவில்லை :மு.க.அழகிரி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ,  ஜூலை 4-ம் தேதி திமுக சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளதே. அந்தப் போராட் டத்தில் நீங்கள் எந்த இடத்தில் பங்கேற்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் அழகிரியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அழகிரி, ’’சிறை நிரப்பும் போராட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. மத்திய அமைச்சர்களாக இருப்பதால் திமுக தலைமையிடம் கேட்டுத்தான் அது குறித்து முடிவு செய்ய முடியும். அது தொடர்பாக கேட்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார்

கருத்துகள் இல்லை: