வியாழன், 22 மார்ச், 2012

Sri Sri Ravishankar:அரசு பள்ளிக்கூடங்கள் Naxalit கூடார மா ம்அனைத்துமாம்

டெல்லி: இந்தியாவின் அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்துமே நக்சலைட்டுகளின் கூடாரம் என்று வாழும்கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் கூறியிருப்பதற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த டபுள் ஸ்ரீ ஷங்கர் என்று அறியப்படும் வியாபார சாமியார் மக்களின் அறியாமையை காசாக்கும் மற்றுமொரு போலியாகும்.
இது தொடர்பாக கபில்சிபல் கூறியுள்ளதாவது:
ஸ்ரீரவி சங்கரின் கருத்தை ஏற்க முடியாது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் , பிரபல நீதிபதிகள், அரசில் உயர் பதவி வகிப்போர் என்று ஏராளமான பிரபலங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா?'' என்றார் அவர்.
ரவிசங்கர் மறுப்பு
இதனிடையே தாம் அவ்வாறு கூறவில்லை என்று ஸ்ரீரவிசங்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: