புதன், 21 மார்ச், 2012

தெய்வம் நின்று கொல்லும்: நடராஜனை சாபம்!

Natarajan
தஞ்சாவூர்: ஜெயா பப்ளிக்கேசனுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடராஜன் கூறியுள்ளார்.
தஞ்சை விளாரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நடராஜனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனாலும் அவர் மீது மேலும் ஒரு வழக்கு போடப்பட்டதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந் நிலையில் தஞ்சை விளார் ரவுண்டானா பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் ஆல்பர்ட் என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் நடராஜன், இளவழகன், சங்கர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நடராஜன், சங்கர் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நடராஜனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தஞ்சை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தஞ்சை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மாஜிஸ்திரேட் முன் நடராஜனும் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு முருகன், போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து நடராஜன் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைவாசலில் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், வழக்கு போடுவது அரசின் கடமை. அதை எதிர்கொள்வது எங்களின் கடமை. தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் (முதல்வர் ஜெயலலிதா) அது போல் நடக்கக்கூடாது.
சசிகலா கூறியது போல ஜெயா பப்ளிக்கேசனுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது தொடங்கிய போது நான் தான் பணம் கொடுத்தேன் என்றார்

கருத்துகள் இல்லை: