வியாழன், 28 ஜூலை, 2011

சங்கராச்சாரியர் காதில் ஒரு கானாப் பாட்டு!?!ஓஷோ

ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார், ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்தது, மேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் , நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது.

கடைசியாக அந்த சொற்பொழிவை சங்கராச்சாரியார் சீக்கிரமே முடிக்க வேண்டியது ஆயிற்று. அவர் அந்த பெண்மணியை தனியாக அழைத்து சொன்னார் “ முதலில் அவனுக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக்கொடு! அவனால் இன்று மிக த் தொந்திரவு ஆகிவிட்டது “ என அறிவுறுத்தினார்.

உடனே அந்த ப் பெண்மணி “ என்ன பன்னறது சாமி நான் எங்கு போனாலும் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறான் ! அப்படி வந்தாலும் நம்ப நேரம் அவனால் உக்கார முடியாது ! இப்படி ஒன்னுக்கு போகனும் என்று ஆரம்பித்துவிடுகிறான் “என்றாள்

சங்கராச்சாரியார் “ நீ அவனிடம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவன் பாட்டு பாடவிரும்புவதாகச் சொல்லச் சொல் அவ்வாறு சொன்னால் சபையில் இருக்கும மற்ற யாருக்கும் தெரியாது. அதனால் எந்த இடையூரும் இருக்காது , இப்படி சபையில் ஒன்னுக்கு போகனும் என்று அசிங்கமாக கேட்டு கொண்டிருக்க மாட்டான் “ என்றார்.

சில மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார் அந்த ப் பெண்மணியின் வீட்டில் தங்க நேர்ந்தது அந்த பெண்மனி சங்க்ராச்சாரியிடம் “ சுவாமி ! தற்ச்செயலாக நான் ஒரு நெருங்கிய சொந்தக்காரரின் மறைவிற்க்கு செல்ல வேண்டியுள்ளது காலை எப்படியும் வந்து விடுவேன் , இந்த குழந்தை என்னிடமோ அல்லது அவனது அப்பவிடமோ மட்டும் தான் துங்கி பழக்கமுள்ளவன் , நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இவனை தங்கள் அருகிலே இன்று இரவு வைத்திருக்கமுடியுமா ? “ எனக் கேட்டார்

சங்கராச்சாரியார் “ ஒரு பிரச்சனையும் இல்லை ! அவன் என்னிடமே இருக்கட்டும் ! “ என்றார்.

நடு இரவில் பிரச்சனை வந்தது அந்த குழந்தை “ நான் பாட்டு பாடவேண்டும் “என தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

சங்கர் “ முட்டாள்! நடு இராத்திரியில் என்ன பாட்டு வேண்டி கிடக்கிறது ! என்னட தூக்கத்தை கெடுத்ததில்லாமல் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுவாய் , எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் , இப்ப பேசம ப் படு “ என்றார்

குழந்தை “ முடியாது , நான் இப்பவே பாட வேண்டும் , பாட்டு அடக்கமுடியாமல் பீறீட்டுகொண்டு வேகமாக வருகிறது என்னால் ஒரு நிமிடம் கூட பொறுக்கமுடியாது ! “ என்றது

சங்கர் “ என்னட இது உன்னோட தொந்தரவாப் போச்சு ! இது தான் முதல் முறை நான் கேட்பது பாட்டு வேகமாக பீறீட்டு கொண்டு வருவதை ! அமாம் யாரோட பாட்டு ( யார் பாடிய பாட்டு என்ற அர்த்ததில் ) “ எனக் கேட்1டார்

குழந்தை “ என்ன கேள்வி இது ! என்னோட சொந்த பாட்டு “ என்றது

சங்கர் “ அப்படியேன்றால் அது பகவான் பாடலாகத்தான் இருக்கும் , சரி எனது காதில் மெதுவாகப் பாடு ! மற்றவர்களின் உறக்கமும் கெடாது “எனச்சொன்னார்

குழந்தை “ நீங்கள் சொல்வதால் நான் செய்கிறேன் !என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூடாது !” என்றது

சங்கர் “ பாட்டுமட்டும்தான பாடப்போகிறாய் ? வேறு ஏதாவது செய்யப் போகிறாய ? எனக் கேட்டார்

குழந்தை “ சுத்தமான பாட்டு மட்டும் தான் “ என்றது

சங்கர் “அப்படியென்றால் உடணடியாக பாடிவிட்டு படுத்துவிடு “ என்றார்

குழந்தை காதில் அழகாகப் பாடியது சங்கராச்சாரியார்க்கு அது பாட்டு என்று இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தது எது என்று புரிந்தது – ஓஷோ

கருத்துகள் இல்லை: