சனி, 30 ஜூலை, 2011

மாடா? மடிக் கணினியா?

வீட்டுக்குள்ள போகவே வெறுப்பா இருக்குடா...ஏண்டா மச்சீ இப்படி சொல்றே! மச்சீ நமக்குதான் ச-மச்சீ-ர் எல்லாம் இல்லையே அப்புறம் ஏண்டா இப்படி வெறுத்து போய் பேசுறே!எல்லாம் இந்த அரசாங்கம் செஞ்ச வேலைதாண்டாஅப்படிக்கு என்னடா ஆச்சு உனக்கு?வீட்டுக்குள்ள போனா அப்பா ஒரு பக்கம் கத்துறாரு... அம்மா ஒரு பக்கம் கத்துறாங்க... டேய் ஒழுங்க படிச்சி மார்க் வாங்கு... அப்படி மார்க் வாங்கினா ஒனக்கு அரசாங்கம் இலவசமா தர்ற லேப்டாப் கிடைக்கும்... இல்லைன்னா... அரசாங்கம் இலவசமா தர்ற ஆடு மாடுதான்... அதை மேச்சிக்கிட்டு ஊரைச் சுத்துன்னு அப்பா கத்துறாருடா மச்சீ...டேய் மச்சீ... அதே கதைதான் எனக்கும்.. இதுக்கு போய் ஏண்டா அலட்டிக்கிறே! உட்டுத்தள்ளு மச்சீ! உட்டுத் தள்ளு!!

கருத்துகள் இல்லை: