செவ்வாய், 17 மே, 2011

கனடாவுக்கு சென்ற கப்பலில் விடுதலைப் புலிகளின் பிரச்சார பொருட்கள் கனடாவுக்கு சென்ற கப்பலில் விடுதலைப் புலிகளின் பிரச்சார பொருட்கள்

கனடாவிற்கு செல்லவென இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார பொருட்கள் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பீ செய்திச் சேவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா முகவரியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் புத்தகங்கள் 45 பெட்டிகளில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: