திங்கள், 16 மே, 2011

சரணாகாத புலி உறுப்பினர்களைச் சரணடையக் கோருகிறது அரசு

இதுவரை புனர்வாழ்வுக்குட்படுத்தப்படாத விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சரணடை யுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது.இராணுவத்தினரிடம் கைதாகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் அல்லது தம்மை வெளிக்காட்டாத நிலையில் பொது மக்களுடன் கலந்து வாழும் விடுதலைப் புலி உறுப்பினர்களில் இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்கள் சுயவிருப்பின் அடிப்ப டையில் சரணடைய முடியும் என அரசாங்கம் அறி வித்துள்ளது.

சுயவிருப்பின் அடிப்படையில் சரணடைய விரும்புவோர் தங்க ளுக்கு அருகாமையில் இருக்கும் புனர்வாழ்வு முகாமிற்குச் சென்று தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் என புனர்வாழ்வு ஆணை யாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.எவரேனும் சுயவிருப்பின் அடிப்படையில் புனர்வாழ்வு நிலையங்களில் சரணடைந்தால் நீதிமன்றின் உத்தரவைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக் கப்படும் என்பதோடு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் அவர் கள் மீளவும் சமூகத்தில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: